May 12, 2010

அட்சயதிருதி...










கணவனுக்குத் தெரியாமல்
சில்லறை சேர்த்து
உண்டியல் நிறையுமுன்னே
மென்மையாய் அதை
உடைத்து...

ஒரு கிராம்
தங்கக் காசுக்கு
பணம் தேற்றி...

நடக்க இடமில்லா
தி.நகர் வீதியில்
மக்கள் வெள்ளத்தில் நீந்தி
நகைக்கடை வாயிலில்
நுழையும் கூட்டத்தில்

வரிசையில் நின்று
வேர்த்து விறுவிறுத்து
முட்டி மோதி மிதிபட்டு
உள்ளே நுழைந்து

வெற்றிகரமாய் ஒரு கிராம்
நகை வாங்கி
வெற்றிப் புன்னகையுடன்
சோர்வு நீங்கி மகிழ்வுடன்
வீடு திரும்பியவள்

அதிர்வடைகிறாள்...

கழுத்தில் இருந்த
இரண்டு பவுன்
செயினைக் காணோம்...
                
                     •••••••

1 comment: