March 16, 2010

கதவைத் திற

நித்தமும் ஆனந்தம் கண்ட
ஆன்மீக குருவே..
இளம் வயதில் துறவறம்
பூண்ட இறை அருளே...

பதினேழு நாடுகளில்
பல்லாயிரம் பக்தர்கள்..
கணக்கிட முடியாத
மடங்கள் பீடங்கள்

மாளிகைகள்..
பக்தியோடு ஆசிகள்
வழங்கினீர்கள்
பிரம்மச்சரியத்தின்
அவசியத்தைப்
போதித்தீர்கள்..
கதவைத் திற..
காற்று வரட்டும் என்றீர்கள்
காற்றுக்குப் பதில் சுனாமி
அல்லவா வந்துள்ளது..

பக்தர்களான எங்களை
கைகளை முடி
வணங்கச் சொன்னீர்கள்...

கண்களை முடி
தியானிக்ககச் சொன்னீர்கள்..
வாய் முடி மௌனம்
இருக்கச் சொன்னீர்கள்..

செவிகளை முடி ஐம் புலன்
அடக்கச் சொன்னீர்கள்..

இப்படி எங்களை
எல்லாவற்றையும்
முடச் சொன்ன நீங்கள்

உங்கள் அறைக் கதவைக்
கொஞ்சம் மூடச்
சொல்லியிருக்கக் கூடாதா
நடிகையிடம்....

                     •••••••

March 15, 2010

துணிவு

பயந்து பயந்து
செய்கிறார்கள்
வெளியே..

கொலை.. கொள்ளை
திருட்டு.. வழிப்பறி
போதைப் பொருட்கள்
கடத்தல்..

மது..விபச்சாரம்
கந்து வட்டி
கூலிப் படை
கட்டைப் பஞ்சாயத்து

இதையெல்லாம்
குற்றவாளிகள்
தைரியமாகச்
செய்கிறார்கள்
சிறைகளில்..

காவலர் அனுமதியுடன்.

மனம்

நான் சைவமாக
இருந்தாலும்
என் கணவர்
அசைவப் பிரியர்

மது அருந்துவார்
புகை பிடிப்பார்
தொடர்புகளும்
பல உண்டு

சீட்டாடுவார்
குதிரைப் பந்தயம்
போவார்

திருத்த முயன்றும்
முடியவில்லை
அனுசரித்து வாழப்
பழகிக் கொண்டேன்

எதையும்
மறைக்கத் தெரியாமல்
சொல்லி விடும்
அவரின் குழந்தை
மனத்திற்காக...

பயணம்

திருமணத்திற்குப்
போகும் வழியில்
எதிரே சவ ஊர்வலம்...

கடந்து செல்லும்
முகம் வாடிய
மனிதர்களைக்
காணும்போது

கலகலப்பான
உரையாடல்கள்
சிரிப்புகள்
மறைந்து விடுகின்றன
காரில்...

சிறிது நேரம்தான்
பழைய சிரிப்புகள்
பேச்சுக்கள்
தொடர்கின்றன...

வாழ்க்கைப் பாதையில்
நின்று நிதானித்து
பயணமாக
சிகப்பு பச்சை
விளக்குகள்...

விளக்குவதற்காகவே
வைக்கப்பட்டிருக்கின்றன
பல விளக்குகள்
பயணமாகாமல்...