March 15, 2010

பயணம்

திருமணத்திற்குப்
போகும் வழியில்
எதிரே சவ ஊர்வலம்...

கடந்து செல்லும்
முகம் வாடிய
மனிதர்களைக்
காணும்போது

கலகலப்பான
உரையாடல்கள்
சிரிப்புகள்
மறைந்து விடுகின்றன
காரில்...

சிறிது நேரம்தான்
பழைய சிரிப்புகள்
பேச்சுக்கள்
தொடர்கின்றன...

வாழ்க்கைப் பாதையில்
நின்று நிதானித்து
பயணமாக
சிகப்பு பச்சை
விளக்குகள்...

விளக்குவதற்காகவே
வைக்கப்பட்டிருக்கின்றன
பல விளக்குகள்
பயணமாகாமல்...

No comments:

Post a Comment