March 15, 2010

துணிவு

பயந்து பயந்து
செய்கிறார்கள்
வெளியே..

கொலை.. கொள்ளை
திருட்டு.. வழிப்பறி
போதைப் பொருட்கள்
கடத்தல்..

மது..விபச்சாரம்
கந்து வட்டி
கூலிப் படை
கட்டைப் பஞ்சாயத்து

இதையெல்லாம்
குற்றவாளிகள்
தைரியமாகச்
செய்கிறார்கள்
சிறைகளில்..

காவலர் அனுமதியுடன்.

No comments:

Post a Comment