March 16, 2010

கதவைத் திற

நித்தமும் ஆனந்தம் கண்ட
ஆன்மீக குருவே..
இளம் வயதில் துறவறம்
பூண்ட இறை அருளே...

பதினேழு நாடுகளில்
பல்லாயிரம் பக்தர்கள்..
கணக்கிட முடியாத
மடங்கள் பீடங்கள்

மாளிகைகள்..
பக்தியோடு ஆசிகள்
வழங்கினீர்கள்
பிரம்மச்சரியத்தின்
அவசியத்தைப்
போதித்தீர்கள்..
கதவைத் திற..
காற்று வரட்டும் என்றீர்கள்
காற்றுக்குப் பதில் சுனாமி
அல்லவா வந்துள்ளது..

பக்தர்களான எங்களை
கைகளை முடி
வணங்கச் சொன்னீர்கள்...

கண்களை முடி
தியானிக்ககச் சொன்னீர்கள்..
வாய் முடி மௌனம்
இருக்கச் சொன்னீர்கள்..

செவிகளை முடி ஐம் புலன்
அடக்கச் சொன்னீர்கள்..

இப்படி எங்களை
எல்லாவற்றையும்
முடச் சொன்ன நீங்கள்

உங்கள் அறைக் கதவைக்
கொஞ்சம் மூடச்
சொல்லியிருக்கக் கூடாதா
நடிகையிடம்....

                     •••••••

No comments:

Post a Comment